Advertisement

ஈரோடு இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது

By: Nagaraj Mon, 27 Feb 2023 09:54:04 AM

ஈரோடு இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி உள்ளது.

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட உபகரணங்களை அனுப்பும் பணியை ஊழியர்கள் அனுப்பினர். இன்று காலை முதல் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வருகின்றனர்.

 ,by-election, erode, voting, இடைத்தேர்தல், ஈரோடு, வாக்குப்பதிவு

இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்துள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதை முன்கூட்டியே தெரிவிக்காததால் வாக்காளர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தங்கள் செல்போனை யாரிடம் கொடுத்து செல்வது என்று தெரியாமல் வாக்காளர்கள் தவித்து வருகின்றனர்.

Tags :