Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியோடு இருப்போம்: முதல்வர் திட்டவட்டம்

ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியோடு இருப்போம்: முதல்வர் திட்டவட்டம்

By: Nagaraj Sun, 09 July 2023 1:27:06 PM

ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியோடு இருப்போம்: முதல்வர் திட்டவட்டம்

சென்னை: ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியோடு நிற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டி, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவை உதாரணமாகும். பா.ஜ.க.வால் இந்தியாவுக்கே பேராபத்து வந்துகொண்டிருக்கிறது.

policy,lets stand firm,cm,rule,danger ,கொள்கை,. உறுதியோடு நிற்போம், முதல்வர், ஆட்சி, ஆபத்து

2014-ல் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது பா.ஜ.க. நிறைவேற்றியதா? விவசாயிகள் போராட்டத்தை கண்டும் காணாமல் இருந்த ஆட்சி பாஜக ஆட்சி. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என சொன்னதை செய்யவில்லை. கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் தருவேன் என சொன்னார்கள். இதுவரை ரூ.15 கூட தரவில்லை. சர்வாதிகார ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம்.

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியோடு நிற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
|
|
|