- வீடு›
- செய்திகள்›
- நம் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்க வேண்டும் - பிரதமர் மோடி
நம் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்க வேண்டும் - பிரதமர் மோடி
By: Karunakaran Sun, 26 July 2020 8:56:20 PM
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி, இன்று 11 மணிக்கு தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, கொரோனா பாதிப்பில் இருந்து மீட்கப்படும் விகிதத்தில் மற்ற நாடுகளை விட நம் நாடு சிறப்பாக உள்ளது. இறப்பு விகிதமும் மற்ற நாடுகளை விட மிகக் குறைவு. லட்சக்கணக்கான மக்களின் உயிரை நம்மால் காப்பாற்ற முடிந்தது. ஆனால் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை என்று கூறினார்.
21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், நமது ராணுவம் கார்கில் போரில் வென்றது. இந்த நாளை நம்மால் மறக்க முடியாது. ஒட்டுமொத்த உலகமே இந்திய வீரர்களின் திறமையையும் வீரத்தையும் பார்த்தது. கார்கில் போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கூறினார்.
மேலும் அவர், நம்முடைய ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் நாட்டின் நலனுக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம். வீரர்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவு செய்யவேண்டாம் என்று கேட்டு கொண்டார்.