- வீடு›
- செய்திகள்›
- உரிமைகளை நிலைநாட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும்; பேராசிரியர் ரண்ட ஜீவன் அறிவுறுத்தல்
உரிமைகளை நிலைநாட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும்; பேராசிரியர் ரண்ட ஜீவன் அறிவுறுத்தல்
By: Nagaraj Fri, 31 July 2020 6:35:57 PM
அனைவரும் வாக்களிக்க வேண்டும்... உங்களது உரிமையை நிலைநாட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹுல் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”எதிர்வரும்ஆகஸ்ட் 5ஆம் தேதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கொரோனா தொற்றுஅச்சம் காரணமாக மக்கள் வாக்களிப்பதற்கு தயங்குகிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள் என்ற நிலைமை காணப்படுகின்றது உண்மையில் மக்கள் இது தொடர்பில் அச்சப்பட தேவையில்லை
நாங்கள் வாக்களிப்பின் போது கொரோனா தொற்று தடுப்பிற்காக மேற்கொள்ள
வேண்டிய அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் எம்மைப்
பொறுத்த வரைக்கும் ஏற்கனவே சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எவ்வாறு
வாக்களிப்பினை மேற்கொள்வது தொடர்பாக மாதிரி வாக்களிப்பினை பரீட்சித்துப்
பார்த்திருக்கிறோம்
தேர்தல் தினத்தன்று வாக்கு சாவடியில்
வாக்களிப்பின் போது கொரோனா தொற்று ஏற்படகூடிய சாத்தியக்கூறு குறைவானதாகவே
இருக்கும் அதாவது நீங்கள் வீதியில் பயணிக்கும் போதோ அல்லது தங்களுடைய
அன்றாட கடமைகளை செய்யும்போதோ கொரோனா தோற்று ஏற்படுகின்ற வாய்ப்பை விட
வாக்களிப்பு நிலையத்திற்குள் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியக் கூறு மிகவும்
குறைவாகவே காணப்படுகின்றது
அத்தோடு நீங்கள் வாக்களிப்பு
நிலையத்துக்குள் செல்லும் போது மாஸ்க் அணிந்து கைகளை கழுவி ஏனையோர் பாவித்த
பேனைகளைபாவிக்காத வகையில் பல சுகாதார நடைமுறைகளை வாக்களிப்பு
நிலையங்களில் மேற்கொண்டுள்ளோம்
வீதிகளில் நடமாடும் போது ஏற்படும்
தொற்றுக்குரிய வாய்ப்பினை விட வாக்களிப்பு நிலையத்தில் மிகவும் குறைவானது.
எனவே உங்களுக்குரிய வாக்களிப்பு உரிமையை சரியாக பயன்படுத்திக் கொள்ள
வேண்டும்” என்றார்.