குடிபோதையில் வாகனம் ஓட்டி இடையூறு செய்த மாஜி ஊடக பணிப்பாளர் கைது
By: Nagaraj Sat, 17 Dec 2022 11:12:08 AM
கொழும்பு:முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பணிப்பாளராக பணியாற்றிய சுதேவ ஹெட்டியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போதையில் கார் ஓட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் செலுத்திய அவர், ராஜதந்திரிகளின் தொடரணிக்கு தடங்கல் ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
குடிபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொலிஸாரின் உத்தரவை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
போலீசாரின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இருப்பினும் இதற்கு பின் அரசியல் உள்ளது என்று ஒரு சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Tags :
drunk |
accused |
arrested |
police |