டெட் 2ஆம் தாள் வருகிற டிசம்பர் மாதம் தேர்வு நடத்த தேர்வு வாரியம் திட்டமிடல்
By: vaithegi Fri, 04 Nov 2022 4:11:16 PM
சென்னை: டிசம்பர் மாதம் தேர்வு நடத்த தேர்வு வாரியம் திட்டமிடல் .... இந்த ஆண்டிற்கான டெட் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளியானது. அதில் முதல் தாளுக்கு 2 லட்சத்து 30,878 பேரும், 2-ம் தாளுக்கு 4 லட்சத்து 1,886 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த ஆண்டிற்கான முதல் தேர்வு அக்டோபர் 14 முதல் 19 ஆம் தேதி வரை கணினி மூலமாக நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினார்கள். இதையடுத்து இந்த நிலையில் 2 ஆம் தாள் தேர்வு எழுத 4 லட்சத்து 1,886 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
இதனை அடுத்து அவர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் தேர்வு நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அது மட்டுமில்லாமல் இந்த தேர்வையும் கணினி வழியில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பருவ விடுமுறையை கணக்கில் கொண்டு தேர்வு குறித்த தேதி வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.