Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிகளவு தண்ணீர் திறப்பு... பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

அதிகளவு தண்ணீர் திறப்பு... பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

By: Nagaraj Sun, 28 Aug 2022 5:01:33 PM

அதிகளவு தண்ணீர் திறப்பு... பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

தஞ்சாவூர்: அதிகளவு தண்ணீர் திறப்பதால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பொதுமக்கள் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை இந்த ஆண்டு 3 வந்து முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது .மேட்டூர் அணையில் இருந்து 86,540 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு - 13,160 கனஅடி வீதமும் காவிரியில் - வினாடிக்கு 3,009 கனஅடி வீதமும், வெண்ணாறில் - வினாடிக்கு - 4,515 கனஅடி வீதமும், கல்லணை கால்வாய் ஆற்றில் - வினாடிக்கு 1,011கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

farmers,cattle,selfie,do not take,security,district collector ,விவசாயிகள், கால்நடைகள், செல்பி, எடுக்கக்கூடாது, பாதுகாப்பு, மாவட்ட ஆட்சியர்

இந்நிலையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கூடுதல் தண்ணீர் திறக்க உள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோள் எடுத்துள்ளார்.

ஆறுகளில் குளிக்கவும், நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என எச்சரித்துள்ள ஆட்சியர் ஆறுகள் வாய்க்கால்களில் கால்நடைகளை விவசாயிகள் அழைத்துச் செல்லக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags :
|
|