Advertisement

கொரோனா வார்ட்டில் இருந்து எஸ்கேப் ஆன நபரால் பரபரப்பு

By: Nagaraj Thu, 28 May 2020 7:56:06 PM

கொரோனா வார்ட்டில் இருந்து எஸ்கேப் ஆன நபரால் பரபரப்பு

கொரோனா வார்ட்டில் இருந்து எஸ்கேப் ஆகி ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்த பின்னரே மருத்துவக்குழுவினர் பெருமூச்சு விட்டனர்.

கொரொனா வைரஸ் பாதிப்புக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 108-பேர் இன்றைய நிலவரப்படி சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 19-பேர் முழுமையாக குணமடைந்து இன்று அவர்களது வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் தலைமையில் பழங்கள் வழங்கப்பட்டு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

corona,ward,fled,medical team,caught ,கொரோனா, வார்டு, தப்பியோடினார், மருத்துவக்குழுவினர், பிடித்தனர்

அப்போது குணமடைந்தவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிக்கொண்டு இருக்கும் போது கரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் எஸ்கேப் ஆகி ஓடினார்.

அவ்வளவுதான் பரபரப்பு பற்றிக் கொண்டது. இருப்பினும் அவரை சுகாதார பணியாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனை காவலர்கள் விரட்டி பிடித்து மீண்டும் கொரோனா சிகிச்சை பிரிவில் கொண்டு ஒப்படைத்தனர். அந்த நபர் பிடிபட்ட பின்னரே மருத்துவக்குழுவினர் பெரு மூச்சு விட்டனர்.

Tags :
|
|
|