Advertisement

பயங்கரவாதி வலியுல்லாகானுக்கு தூக்கு தண்டனை விதிப்பு

By: Nagaraj Mon, 06 June 2022 11:34:57 PM

பயங்கரவாதி வலியுல்லாகானுக்கு தூக்கு தண்டனை விதிப்பு

வாரணாசி: வாரணாசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் பயங்கரவதி வலியுல்லாகானுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாரணாசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 28 பேர் பலியாகினர். இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-கஹர் என்ற அமைப்புதான் காரணம் என்று தெரியவந்தது.

judgment,death penalty,trial,court,terrorist ,தீர்ப்பு, ம ரண தண்டனை, விசாரணை, கோர்ட், பயங்கரவாதி

இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பயங்கரவாதி முகம்மது வலியுல்லா கான் 2006 ஏப்ரலில் கைது செய்யப்பட்டான். உ.பி. மாநிலம் காசியாபாத் கோர்ட்டில் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த 4-ம் தேதி நடந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியான முகம்மது வலியுல்லா கான் குற்றவாளி என அறிவித்தது.
இன்று நடந்த விசாரணையில் வலியுல்லாகானுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.

Tags :
|
|