யானைகள் எண்ணிக்கையை கணக்கிட நிபுணர் குழு அமைப்பு
By: Nagaraj Tue, 14 July 2020 10:16:38 AM
யானைகள் கணக்கிட நிபுணர் குழு... தமிழ்நாட்டில் உள்ள யானைகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்த 11 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை 140 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில், யானைகளின் மரணம், வாழிட பிரச்னைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு வனத்துறை சிறப்பு நிபுணர் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.
இதில், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் தலைமையில் 10 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
யானைகளின்
இறப்பு, பிறப்பு குறித்த ஆய்வு, யானைகள் வாழிடங்களை மேம்படுத்த
மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து டிசம்பர் 31-ம் தேதிக்குள்
அறிக்கை சமர்ப்பிக்க வனத்துறையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் துரைராசு
உத்தரவிட்டார்.