Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜோர்டானில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து - 2 பேர் பலி

ஜோர்டானில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து - 2 பேர் பலி

By: Karunakaran Sat, 12 Sept 2020 09:41:26 AM

ஜோர்டானில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து - 2 பேர் பலி

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டானின் தலைநகர் அம்மானில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் சர்கா நகர் உள்ளது. இங்கு ராணுவ ஆயுத கிடங்குகள் உள்ளன.இந்த கிடங்குகளில் பயன்படுத்தப்படாத மோட்டார் குண்டு போன்ற ஆயுதங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை இங்குள்ள ஒரு கிடங்கில் திடீரென பயங்கர வெடி விபத்து நேரிட்டது.

ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கிடங்குகளுக்கும் பரவியதால் அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் தொடர்ச்சியாக வெடித்துச் சிதறின. இதனால் அந்தப் பகுதியே அதிர்ந்தது. மேலும், வான் உயரத்துக்கு தீப்பிழம்புகள் எழுந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் உருவானது. ஆயுதக் கிடங்குகளை சுற்றி குடியிருப்பு பகுதிகள் எதுவும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

explosion,army depot,jordan,two death ,வெடிப்பு, இராணுவ டிப்போ, ஜோர்டான், இரண்டு மரணம்

இந்த வெடி விபத்தில் சிக்கி 2 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதுபற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்துக்கு பொதுமக்கள் செல்லாத வகையில் சர்கா நகருக்கு அதிகாரிகள் சீல் வைத்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.

கடந்த மாதம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்து சிதறியது. இதனால் சுமார் 200 பேர் பலியாகினர்.மேலும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்நகரம் அழிந்த நகரமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Tags :
|