Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரான் நாட்டின் மின் உற்பத்தி நிலையத்தில் வெடி விபத்து

ஈரான் நாட்டின் மின் உற்பத்தி நிலையத்தில் வெடி விபத்து

By: Karunakaran Mon, 20 July 2020 10:05:09 AM

ஈரான் நாட்டின் மின் உற்பத்தி நிலையத்தில் வெடி விபத்து

ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதையடுத்து அணு ஆயுத தயாரிப்பு, அணு ஆயுத செறிவூட்டல் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா போன்ற பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்நாட்டின் அணு ஆயுத செறிவூட்டல் மையம், பெட்ரோ கெமிக்கல், மையம், திரவ எரிபொருள் உற்பத்தி மையம், மின் உற்பத்தி மையம், மருத்துவமனை போன்ற நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பல பகுதிகளில் மர்மமான முறையில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

iran,power plant,explosion,mystery ,ஈரான், மின் உற்பத்தி நிலையம், வெடிப்பு, மர்மம்

மர்மமான முறையில் வெடி விபத்துகளும், தீ விபத்துகளும் ஏற்பட்டு வருவதற்கான காரணங்கள் என்ன என்பதை கண்டுபிடிக்க குழப்பம் நீடித்து வருகிறது. அணு ஆயுத உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல்களை இஸ்ரேல் சைபர் நடத்துவதாக ஈரான் அரசு குற்றச்சாட்டியுள்ளது. தற்போது, நாட்டின் இஸ்பஹன் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று திடீரென மர்மமான முறையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த தீவிபத்து காரணமாக அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. இதனால் நகரின் முக்கிய இடங்களில் சில மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags :
|