Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்

விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்

By: vaithegi Mon, 04 July 2022 6:43:12 PM

விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்

திருப்பதி: இந்தியாவில் கோடை காலம் தொடங்கி உள்ளதால், சுற்றுலா தலங்களுக்கு செல்ல, பயணிகள் பலர் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த சாதாரண பயணிகள் ரயில் போக்குவரத்து கொரோனா காரணமாக கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது அனைத்து ரயில் சேவைகளும் மறுபடியும் தொடங்கி உள்ளதால், விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு பாசஞ்சர் ரயிலுக்கு பதிலாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

train service,express ,ரயில் சேவை,எக்ஸ்பிரஸ்

அதனால், விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி நோக்கி புறப்பட்ட விரைவு ரயிலை ரயில் நிலைய அதிகாரிகள் ஜூலை 1ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் தினசரி மாலை 5.20 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் விரைவு ரயில் இரவு 11 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது.

அதே மாதிரி அதிகாலை 2.35 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும் விரைவு ரயில் காலை 10.30 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது. இதையடுத்து 9 பெட்டிகளுடன் புறப்பட்ட விரைவு ரயிலில் ஏராளமான பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்வர்கள்.

Tags :