ஒன்ராறியோ சட்டமன்றத்திலிருந்து என்டிபி கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றம்
By: Nagaraj Thu, 03 Nov 2022 11:34:46 AM
கனடா: கனடாவின் ஒன்ராறியோ மாகாண சட்டமன்றிலிருந்து என்.டி.பி கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
கல்விப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாது என்ற புதிய சட்ட ஏற்பாட்டை எதிர்த்து சட்ட மன்றில், என்.டி.பி குரல் கொடுத்தது. அரசாங்கம் பொய்யுரைப்பதாக என்.டி.பி கட்சி தலைவர் பீட்டர் டபுன்ஸ் குற்றம் சுமத்தியிருந்தார். தொடர்ந்து கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த சட்டம் அமுல்படுத்தப்படக் கூடாது எனவும் கல்விப் பணியாளர்களின் பேரம்
பேசும் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் கட்சியின் தலைவர் டாபுன்ஸ்
தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோ முதல்வர் அனைத்து மக்களையும் ஒரே
விதமாக நாடாத்த வேண்டுமெனவும் அந்த கொள்கையை அவர் பின்பற்றுவதில்லை எனவும்
முதல்வர் டக் போர்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.