Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 12ம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

12ம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

By: vaithegi Fri, 19 May 2023 10:08:34 AM

12ம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 23ஆம் தேதி வரை நீட்டிப்பு .... தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் மே 8ம் தேதி இதற்கான முடிவுகள் வெளியாகின. மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற்ற பொது தேர்விற்காக தமிழ்நாட்டில் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகளும்,

இதனை அடுத்து புதுச்சேரியில் 14 ஆயிரத்து 728 பேரும் விண்ணப்பித்து இருந்த நிலையில் தமிழ்நாட்டில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,55,450 பேர் தேர்ச்சி பெற, 47,934 மாணவ, மாணவியர்கள் தோல்வியடைந்தனர்.

time limit,supplementary examination,extension ,கால அவகாசம் , துணை தேர்வு,நீட்டிப்பு

இதையடுத்து தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு அறிவிக்கப்பட்டது. பொது தேர்வு எழுதாத மாணவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் வருகிற ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 24-ம் தேதி துணை தேர்வு நடத்தப்படும் என கூறி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது .

துணைத்தேர்வு எழுதும் மாணவர்கள் மே 9ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் மாணவர்கள் நல்ன்கருதி துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Tags :