காலாண்டு விடுமுறை நீட்டிப்பு
By: vaithegi Wed, 27 Sept 2023 2:12:54 PM
சென்னை: தமிழகத்தில் தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அனைவர்க்கும் வருகிற செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது.
ஆனால் இதற்குள் ஏற்கனவே அரசு விடுமுறைகளும் வருவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதையடுத்து இந்த விடுமுறையை நீட்டிக்குமாறும் கோரிக்கைகள் எழுந்தது. அதனை பரிசீலித்த தமிழக அரசு தற்போது ஒரு புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு உள்ளது. எனவே அதன்படி 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்பு அறிவித்தது போல வருகிற அக்.3ல் பள்ளிகள் திறக்கப்படும்.
ஆனால், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற அக்.9ம் தேதி அன்றே பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த புதிய அறிவிப்பால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.