Advertisement

பனி ... பீகாரில் பள்ளிகளுக்கு விடுமுறையானது நீட்டிப்பு

By: vaithegi Thu, 12 Jan 2023 5:16:35 PM

பனி   ...   பீகாரில் பள்ளிகளுக்கு விடுமுறையானது நீட்டிப்பு

பீகார் : ஜனவரி 16 ஆம் தேதி வரை நீட்டிப்பு .... இந்தியா முழுவதும் கடந்த நவம்பர் முதல் கடும் குளிர் நிலவி கொண்டு வருகிறது. இக்குளிரால் உத்திர பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலவும் கடும் குளிரால் அம்மாநில மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

இதனையடுத்து காலை நேரங்களில் பனிமூட்டம் சூழ்வதால் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய கால நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு மாநில அரசுகள் பள்ளிகளுக்கு விடுமுறையை அளித்துள்ளது.

holiday,bihar,pani ,விடுமுறை,பீகார் ,பனி

மேலும் அரையாண்டு தேர்வுக்கு பிறகு தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது வரை பனி முற்றிலும் குறையாத நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறையானது நீட்டிக்கப்பட்டும் வருகிறது.

இதையடுத்து பீகார் மாநிலத்தில் சில பகுதிகளில் ஜனவரி 14 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை பனியின் காரணமாக ஜனவரி 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்த மாநிலத்தின் பாட்னா, சமஸ்டிப்பூர் மற்றும் முசாபர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜன. 14 வரை விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
|