Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..

அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..

By: Monisha Fri, 08 July 2022 8:08:47 PM

அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..

தமிழ்நாடு: CBSE தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து அடுத்த 5 நாட்கள் வரை பொறியியல், கலை மற்றும்அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும், CBSE முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து அடுத்த 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த அறிவிப்பு பொறியியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்தார்.

college,arts,science,apply ,தேர்வு ,முடிவு,கல்லூரி,கலை,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3.64 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், தேவைக்கேற்ப கல்லூரிகளின் இடங்கள் 10% முதல் 15% வரை அதிகரிக்கப்படும் என்று பேசிய அமைச்சர் பொன்முடி.
உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு இதுவரை 2.2 லட்சம் மாணவியர் விண்ணப்பித்துள்ளதாகவும், கல்லூரிகள் திறக்கப்பட்டு ஒரு மாத காலத்துக்குள் திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags :
|