Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் பயனர்களின் நலன் கருதி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

மின் பயனர்களின் நலன் கருதி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

By: vaithegi Sat, 31 Dec 2022 3:41:02 PM

மின் பயனர்களின் நலன் கருதி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு ..... தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த பணியை மக்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.இடையில் ஆன்லைன் மூலம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க முயன்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்கல் பல ஏற்பட்டது.

duration,electricity connection number,aadhaar number , கால அவகாசம் , மின் இணைப்பு எண், ஆதார் எண்

இதையடுத்து இது பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மின் பயனர்கள் இடையூறின்றி ஆதார் – மின் இணைப்பு எண்ணை இணைக்கும் பணியை வழக்கம் போல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் மின் பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே அதன்படி வரும் 2023 ஜனவரி 31ம் தேதி வரை ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைத்து கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :