Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை – தாம்பரம், நெல்லை – மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில்களை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

நெல்லை – தாம்பரம், நெல்லை – மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில்களை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

By: vaithegi Wed, 06 July 2022 8:53:32 PM

நெல்லை – தாம்பரம், நெல்லை – மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில்களை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

நெல்லை: நெல்லையில் இருந்து தென்காசி வழியாக பழனி, பொள்ளாச்சிக்கு முதன்முறையாக ரயில் இயக்கப்பட்டதால் பயணிகளுக்கு அது மிகவும் பெரும் வசதியாக இருந்தது. அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் பயணிகள் சென்னை தாம்பரம் செல்ல வசதியாக இருந்தது. ஆனால் இந்த ரயில் கட்டணங்கள் வழக்கமாக வசூலிக்கப்படும் தட்கல் கட்டணத்தை விட 13 மடங்கு அதிகமாக இருந்தாலும் வசதியாக இருப்பதால் மக்கள் அதிகம் வருகின்றனர்.

இந்த ரயில்கள் மூலமாக அதிகம் வருமானம் கிடைக்கின்றன. அது மட்டுமில்லாமல் அம்பை, தென்காசி, ராஜபாளையம் வழித்தடத்தின் வழியாக சென்னை மற்றும் கோவை மேட்டுப்பாளையத்திற்கு தினசரி ரயில்கள் இயக்கிட வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

trains,passengers ,ரயில்கள் ,பயணிகள்

இந்த நிலையில் கோடைகாலம் முடிந்ததை அடுத்து கடந்த ஜூன் மாத இறுதியில் நிறுத்தப்பட்ட நெல்லை – தாம்பரம், நெல்லை – மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில்களை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யவதாக தெற்கு ரயில்வே தரப்பில் முடிவு செய்துள்ளது.

அதன்படி தாம்பரம் – எர்ணாகுளம், தாம்பரம் – நாகர்கோவில், நெல்லை – தாம்பரம், நெல்லை – மேட்டுப்பாளையம் ஆகிய 4 ரயில்களை 3 மாதங்களுக்கு நீட்டித்திட ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த 4 ரயில்களும் மீண்டும் 3 மாத காலத்திற்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|