Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் 6 பேருக்கு அதிதீவிர கொரோனா

பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் 6 பேருக்கு அதிதீவிர கொரோனா

By: Nagaraj Tue, 29 Dec 2020 10:17:43 AM

பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் 6 பேருக்கு அதிதீவிர கொரோனா

6 பேருக்கு அதி தீவிர கொரோனா... பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய அதி தீவிர கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உருமாறிய அதிதீவிர கொரோனா உறுதி செய்யப்பட்ட ஆறு பேரும் தனித்தனி அறைகளில் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

acute corona,6 persons,india,uk ,அதிதீவிர கொரோனா, 6 பேர், இந்தியா, பிரிட்டன்

அதிதீவிர கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட ஆறு பேருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட அதிதீவிர கொரோனா கண்டறியப்பட்டதையடுத்து, பிரிட்டனிலிருந்து நவம்பர் 25-ம் தேதி முதல் டிசம்பர் 23 வரை இந்தியா திரும்பிய 33 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 114 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 6 பேருக்கு அதிதீவிர கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
|