பிரபல பாடகர் எஸ்.பி.பி., மனைவிக்கும் கொரோனா தொற்று?
By: Nagaraj Sat, 15 Aug 2020 2:02:55 PM
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரபணியம் கொரோனோவால் பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனா தொற்றால் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனியார் மருத்துவமனையொன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவரது மனைவி சாவித்திரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதேவேளை, தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள எஸ்.பி.
பாலசுப்ரமணியத்திற்கு செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை
அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எஸ்.பி.
பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 5 ஆம்
தேதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை நேற்றிரவு
மோசமடைந்ததுள்ளமை குறிப்பிடத்தது. இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில்
பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.