29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு .. இந்த தேதி இருந்து அமல்
By: vaithegi Tue, 21 Mar 2023 11:01:50 AM
சென்னை: தமிழகத்தில் சுமார் 55 சுங்க சாவடிகள் இருக்கும் நிலையில் 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு ...
நாடு முழுவதும் சுமார் 566 சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதனை அடுத்து அதில் 2 பங்காக பிரித்து ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் 29-ன் கட்டணங்கள் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இது பற்றிய அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த சுங்கசாவடிகளில் கர்நாடகா, கோவை, ஆந்திரா மற்றும் மதுரைக்கு சென்று திரும்பும் வாகனங்கள் கூடுதலாக ரூ. 55 செலுத்த வேண்டும். இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டணம் மார்ச் 31 -ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.