இன்று நள்ளிரவு முதல் 25க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு
By: Nagaraj Thu, 31 Aug 2023 4:17:34 PM
சென்னை: தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 29 சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. பரனூர், வானகரம், செங்குன்றம், பட்டரைப்பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
மீதம் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. குறிப்பாக மதுரை, திண்டுக்கல், திருச்சி, மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி, எலியார்பத்தி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகிறது.