Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாண் சட்டங்களால் நாடு முழுவதும் விவசாயிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர் - மாயாவதி

வேளாண் சட்டங்களால் நாடு முழுவதும் விவசாயிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர் - மாயாவதி

By: Karunakaran Mon, 30 Nov 2020 10:08:43 AM

வேளாண் சட்டங்களால் நாடு முழுவதும் விவசாயிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர் - மாயாவதி

சமீபத்தில் மத்திய அரசு 3 வேளாண் சட்ட மசோதாவை நிறைவேற்றி அமல்படுத்தியது. இதற்கு விவசாயிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள், 'டெல்லி சலோ' போராட்டத்தை 4 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா விவசாயிகளிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதில் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் புராரி மைதானத்துக்குச் சென்ற பிறகு, டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும். பனிக்காலத்தில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால் அவர்களுக்குத் தேவையான வசதிகள் புராரி மைதானத்தில் செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் அங்கே செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

farmers,outraged,agricultural laws,mayawati ,விவசாயிகள், ஆத்திரம், விவசாய சட்டங்கள், மாயாவதி

இந்நிலையில், விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து வேளாண் சட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது நல்லது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த விவசாயம் தொடர்பான 3 சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் விவசாயிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், இச்சட்டங்கள் நாட்டின் விவசாயிகளைக் கிளர்ந்தெழச் செய்துள்ளது. விவசாயிகளைக் கலந்தாலோசிக்காமல் இயற்றப்பட்டுள்ளதால் இச்சட்டங்கள் குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்வதே நல்லது என்று தெரிவித்துள்ளார்.

Tags :