- வீடு›
- செய்திகள்›
- ஒரு மாதத்திற்கும் மேலாக முழு கொள்ளளவில் அமராவதி அணை நீடிப்பு .. விவசாயிகள் மகிழ்ச்சி
ஒரு மாதத்திற்கும் மேலாக முழு கொள்ளளவில் அமராவதி அணை நீடிப்பு .. விவசாயிகள் மகிழ்ச்சி
By: vaithegi Wed, 31 Aug 2022 10:06:47 PM
சென்னை: அமராவதி அணை உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று கொண்டு வருகிறது.
இதை அடுத்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு விடப்படுகிறது. மேலும் அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது.
இந்நிலையில் காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழை பெய்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக அமராவதி அணை நிரம்பியது.சூழ்நிலைக்கு ஏற்ப உபரிநீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.
எனவே இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அணை அதன் முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. மேலும் வானம் மேகமூட்டமாக காணப்படுவதால் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவுகிறது.இதனையடுத்து அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் மிக தீவிரமாக கண்காணித்து கொண்டு வருகின்றனர்.