Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீலகிரியில் காய்கறிகள் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரம்

நீலகிரியில் காய்கறிகள் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரம்

By: Monisha Sat, 06 June 2020 6:19:59 PM

நீலகிரியில் காய்கறிகள் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரம்

நீலகிரியில் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், முள்ளங்கி, பீன்ஸ், டர்னீப், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியிடங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுவது குறைந்து உள்ளது. மேலும் உள்ளூர் மார்க்கெட்டுகளிலும் குறைந்த அளவே விற்பனையாகிறது. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றாலும், போதிய விலை கிடைப்பது இல்லை.

nilgiris,vegetables,harvest,farmers,potatoes,cabbage ,நீலகிரி,காய்கறிகள்,அறுவடை,விவசாயிகள்,உருளைக்கிழங்கு,முட்டைக்கோஸ்

மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதன்படி கடந்த சில நாட்களாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து மழை பெய்தால் காய்கறிகள் அழுகும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் காய்கறிகளை முன்கூட்டியே அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

ஊட்டி அருகே பட்பயர் பகுதியில் கேரட், பீட்ரூட் காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து காய்கறிகளை அறுவடை செய்து வருகின்றனர்.

Tags :