Advertisement

தென்னை மரங்களை அழித்த யானைகளால் விவசாயிகள் வேதனை

By: Nagaraj Sun, 13 Nov 2022 1:18:39 PM

தென்னை மரங்களை அழித்த யானைகளால் விவசாயிகள் வேதனை

கொழும்பு: தென்னை மரங்களை அழித்த யானைகள்... வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணியில் பெருந்தொகையான பப்பாளி மற்றும் தென்னைமரங்களை யானைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி புளியங்குளம் பிரதான வீதிக்கு அருகாமையில் சுமார் 8 ஏக்கர் அளவில் பப்பாளி செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இரவு நேரத்தில் தோட்டத்தினுள் உள்நுழைந்த யானைகள் அறுவடைப் பருவத்தில் காணப்பட்ட சுமார் 150 க்கும் மேற்பட்ட பப்பாள மரங்களை முறித்து அழித்துள்ளது.

elephants,papaya tree,destroyed,farmers,worry ,யானைகள், பப்பாளி மரம், அழித்தன, விவசாயிகள், கவலை

இதேவேளை அருகாமையில் உள்ள காணிக்குள் புகுந்த யானைகள் ஒருதொகை தென்னை மரங்களையும் அழித்துள்ளது. மேலும் யானை வேலி அமைக்கப்பட்டு இருந்தும் தமக்கு பிரியோசனம் இல்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

இதேவேளை தற்போது வளர்ப்பு யானைகளை இப்பகுதியில் வருவதால் இவ் அழிவுக்கு காரணம் எனவும், விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். எனவே இதற்கான சரியான தீர்வினை தமக்கு பெற்றுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :