Advertisement

மிளகாய் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை

By: Nagaraj Fri, 03 Feb 2023 09:55:37 AM

மிளகாய் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை

திண்டுக்கல்: மிளகாய் விலை குறைந்தது... ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் மிளகாய் விலை குறைந்துள்ளது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த மாதத்தில் கொள்முதல் விலை கிலோவிற்கு 21 ரூபாய் ஆக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான அம்பிளிக்கை, கெட்டையூரம்பு, உடையகோட்டை, பால்கடை, வண்டிப்பாதி, கண்ணனூர் போன்ற மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மிளகாய் பயிரிட்டுள்ளனர்.

chilli cultivation,concern,farmers, ,கவலை, மிளகாய் சாகுபடி, விவசாயிகள்

கடந்த மாதம் கிலோ ரூ.50க்கு விற்கப்பட்ட மிளகாய், தற்போது ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளால் கிலோ ரூ.21க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான டன் மிளகாய் லாரிகள் மூலம் தமிழகத்தின் கேரளா, திருநெல்வேலி, மதுரை பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது

Tags :