Advertisement

யாழ்ப்பாணம் மாநகர சபை முன்பாக தனியொருவர் உண்ணாவிரதம்

By: Nagaraj Wed, 19 Apr 2023 12:43:52 PM

யாழ்ப்பாணம் மாநகர சபை முன்பாக தனியொருவர் உண்ணாவிரதம்

யாழ்ப்பாணம்: தனியொருவராக உண்ணாவிரதம்... யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் இன்று (புதன்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாம்.

fasting,protest,jaffna municipal council,officials,action ,உண்ணாவிரதம், போராட்டம், யாழ் மாநகர சபை, அதிகாரிகள், நடவடிக்கை

அந்த கட்டிடத்தின் கழிவு நீர் தன்னுடைய வீட்டிற்குள் வருவதாகவும், இதனை மாநகர சபையிடம் பல்வேறு தடவைகள் முறையிட்டும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதனாலேயே ஒருநாள் அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

குறித்த நபருடன் யாழ்மாநகரசபை அதிகாரிகள் கலந்தாலோசித்தபோதும் குறித்த நபர் தொடர்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

Tags :