திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கோவையில் உண்ணாவிரதம்
By: Nagaraj Fri, 02 Dec 2022 8:51:28 PM
கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
கோவையை திமுக புறக்கணிப்பதை கண்டித்தும், சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமானப் பொருள் விலை உயர்வு, சாலைகளை சீரமைக்காதது, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்பனெ போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி பொற்காலம். கோவை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
குடிமராமத்து தொடங்கி தடுப்பணைகள் வரை மக்கள் நலத்திட்டங்களை அதிமுக அரசு கவனித்து வருகிறது என்றார்.
வெள்ளலூரில்
உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியை கொச்சைப்படுத்துவதை ஸ்டாலின்
கைவிட வேண்டும்.
திமுக ஆட்சிக்கு
வந்ததில் இருந்து இது வரை என்ன பெரிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது என
கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, இந்த உண்ணாவிரதப் போராட்டம்
கும்பகர்ணனின் துக்கத்தில் இருந்து திமுக அரசை எழுப்பியுள்ளது என்றும்
கூறினார்.
அதிமுக கொண்டு வந்த அனைத்து
நலத்திட்டங்களையும் திமுக அரசு முடக்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
மக்களின் கோபத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி
பழனிசாமி கேட்டுக் கொண்டார். ஒரு அரசு எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு 18
மாத திமுக ஆட்சியே சாட்சி என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.