Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெற்ற குழந்தையை பணத்திற்காக விற்ற தந்தை; ஹைதராபாத்தில் பரபரப்பு

பெற்ற குழந்தையை பணத்திற்காக விற்ற தந்தை; ஹைதராபாத்தில் பரபரப்பு

By: Nagaraj Tue, 26 May 2020 7:37:58 PM

பெற்ற குழந்தையை பணத்திற்காக விற்ற தந்தை; ஹைதராபாத்தில் பரபரப்பு

ஊரடங்கு உத்தரவால் வருமானம் இல்லாத நிலையில் தந்தையே தன் குழந்தையை பணத்திற்காக விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத் ஜீதிமெட்லா என்ற பகுதியை சேர்ந்தவர் மதன் சிங். இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மற்றொரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் கூலி தொழிலாளர்கள் பலரும் வேலையின்றி உணவில்லாமல் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். அவ்வாறே தினக்கூலியான, குடிப்பழக்கத்திற்கு அடிமையான மதன் சிங்கும் பணத்திற்காக பெருமளவில் சிரமப்பட்டு வந்துள்ளார்.


child,sales,father,police arrested,excited,rescued ,குழந்தை, விற்பனை, தந்தை, போலீசார் கைது, பரபரப்பு, மீட்டனர்

இந்நிலையில் வருமானம் எதுவும் இல்லாத நிலையில், அவர் தனது பக்கத்து வீட்டில் குழந்தையில்லாமல் வசித்துவந்த சேகு என்பவருக்கு தனது 2 மாத குழந்தையை 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்த நிலையில், அவர்கள் விரைந்து குழந்தையை மீட்டுள்ளனர். மேலும் குழந்தையை விற்றவர், வாங்கியவர் என அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|
|