Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிரடி சோதனை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிரடி சோதனை

By: Nagaraj Tue, 24 Jan 2023 10:55:38 AM

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிரடி சோதனை

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதி ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் ஆகும்.

president of the united states,fbi officials,documents,action,excitement,investigation ,அமெரிக்க அதிபர், எப்பிஐ அதிகாரிகள், ஆவணங்கள், அதிரடி, பரபரப்பு, சோதனை

அரசின் அதிமுக்கிய, ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 13 மணி நேரம் நடந்த சோதனையில் ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|