புதுச்சேரியில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு பிப்ரவரி 4 வேலை நாள்
By: vaithegi Sat, 14 Jan 2023 6:03:06 PM
புதுச்சேரி: பிப்ரவரி 4 வேலை நாள் ... தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து இயற்கைக்கும், விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் வாழக்கூடிய புதுவையிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த பொங்கல் பண்டிகையின் 3 – ம் நாள் உழவர் திருநாள். உயிர் வாழ தேவையான உணவினை அழிக்கும் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக உழவர் திருநாள் மக்களால் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து நடப்பு ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள இந்த உழவர் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஜனவரி 17-ம் தேதி அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 4 – ம் தேதி வேலை நாள் என்று புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் அறிவித்துள்ளார்.