தமிழகம் மற்றும் புதுவையில் பிப். 15-ம் தேதி வரை வறண்ட வானில் நிலவ கூடும்
By: vaithegi Mon, 13 Feb 2023 6:24:29 PM
சென்னை: இந்தியாவில் நடப்பு ஆண்டு குளிரின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. கடந்த மாதங்களில் டெல்லி, ஹரியானா, ஜார்கண்ட், குஜராத் மாநிலங்களில் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் குளிர் அலை நிலவும் என்றும் எச்சரிக்கை ஒன்றை விடுத்தது.மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் கடந்த 1 மாத காலமாக குளிர் நிலவி கொண்டு வருகிறது.
இதனை அடுத்து இது குறித்து சென்னை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வெப்பநிலை குறைந்தபட்சமாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.