Advertisement

சிறுவனை கடித்த நாயின் பெண் உரிமையாளருக்கு அபராதம்

By: Nagaraj Wed, 07 Sept 2022 11:14:07 PM

சிறுவனை கடித்த நாயின் பெண் உரிமையாளருக்கு அபராதம்

உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் (ghaziabad) அருகில் இருந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள லிஃப்ட்டில் சிறுவனை ஒருவரின் வளர்ப்பு நாய் கடித்தது. இதைப் பார்த்த அந்த நாயினை வளர்ப்பவர் கண்டுகொள்ளாமல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுவனின் தந்தை அந்தப் பெண்மணியிடம் உரையாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. வீடியோவில், பார்க்கிங் பகுதியில், நாயுடன் நிற்கும் பெண்மணியிடம், சிறுவனின் தந்தை,” தன்னுடைய சிறுவனை நாய் கடித்துவிட்டது. நீங்கள் எந்த ஃபிளாட்டில் இருக்கீங்கன்னு; சொல்லுங்கன்னு’ என்று கேட்கிறார்.

lift,boy,fine,woman sued,dog,bitten ,லிப்ட், சிறுவன், அபராதம், பெண் மீது வழக்கு, நாய், கடித்தது

மேலும், அதில் பெண்ணிடம் நியாயம் கேட்கும்விதமாக பேசுகிறார் சிறுவனின் தந்தை. அந்தப் பெண் அவருக்கு எதுவும் பதிலளிக்காமல் நாயை அழைத்து கொண்டு செல்கிறார். இந்த வீடியோவையும் பலரும் பகிந்து வருகின்றனர்.


மேலும், காசியாபாத் நகராட்சி பெண் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுவனின் தந்தை Nandgram காவல் நிலையத்தில் நாய் வளர்க்கும் பெண் மீது புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் அவருடைய வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில், நாய் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், அந்தப் பெண்ணுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags :
|
|
|
|