Advertisement

சாலையின் நடுவே நின்ற சண்டையிட்ட குட்டி யானைகள்

By: Nagaraj Fri, 23 June 2023 8:36:09 PM

சாலையின் நடுவே நின்ற சண்டையிட்ட குட்டி யானைகள்

கோவை: மருதமலையில் குட்டி யானைகள் சாலையின் நடுவே நின்று ஒன்றுக்கொன்று துதிக்கையால் சண்டையிட்டு தழுவி விளையாடி கொண்டிருந்தன.

கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மாலை 5 மணிக்கு மேல் மருதமலை செல்லும் மலைப்பாதையில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

cub,elephants,fight,road, ,குட்டி, சண்டை, சாலை, யானைகள், வீடியோ

யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கோவை மருதமலை சாலையில் உள்ள ஐஓபி காலனி பகுதியில் யானைகள் கூட்டம் குட்டியுடன் சாலையோரம் நின்று கொண்டிருந்தது.

அப்போது குட்டி யானைகள் சாலையின் நடுவே நின்று ஒன்றுக்கொன்று துதிக்கையால் சண்டையிட்டு தழுவி விளையாடி கொண்டிருந்தன. இதனை அந்த பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|