செப்டம்பர் 15ம் தேதிக்கு பின்னர் இறுதி பருவத் தேர்வு
By: Nagaraj Wed, 02 Sept 2020 09:32:04 AM
அமைச்சர் அறிவிப்பு... அனைத்து பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான இறுதி பருவத் தேர்வு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு நடத்தப்பட உள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதற்கான விரிவான அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இறுதி ஆண்டு தேர்வு மாணவர்கள் நேரில் வந்து எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறும் அமைச்சர் அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்,
பிஆர்க் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர் 7
ஆம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்து என்பதும் குறிப்பிடத்தக்கது.