Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்த இயலாது; மகாராஷ்டிரா உறுதி

இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்த இயலாது; மகாராஷ்டிரா உறுதி

By: Nagaraj Sat, 11 July 2020 11:45:42 AM

இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்த இயலாது; மகாராஷ்டிரா உறுதி

தேர்வு நடத்த இயலாது... உயர்கல்வி பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்த இயலாது என மகாராஷ்டிர உயர்கல்வித் துறை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குவதற்கு ஏதுவாக இணையவழியாகவோ, நேரடியாகவோ தேர்வு நடத்த வேண்டும் எனத் துணைவேந்தர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

the security,the final year students,cannot choose,hold ,பாதுகாப்பு, இறுதியாண்டு மாணவர்கள், தேர்வு, நடத்த இயலாது

இந்நிலையில் மகாராஷ்டிர உயர்கல்வித்துறை அமைச்சர் உதய் சாமந்த் வெளியிட்டுள்ள காணொலியில், 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் கலந்தாய்வு செய்தபின், கொரோனா பெருந்தொற்று சூழலில் மாநிலத்தில் இறுதியாண்டுத் தேர்வுகளை நடத்த இயலாது என முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், தேர்வுப் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஆகியோரின் உடல்நலம், பாதுகாப்புக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பெற்றோர்கள் மிகுந்த அச்சம் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

Tags :