Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் 5 பெட்டிகளில் தீவிபத்து... ரயில் பயணிகள் அலறியடித்து ஓட்டம்

மகாராஷ்டிராவில் 5 பெட்டிகளில் தீவிபத்து... ரயில் பயணிகள் அலறியடித்து ஓட்டம்

By: Nagaraj Tue, 17 Oct 2023 5:18:47 PM

மகாராஷ்டிராவில் 5 பெட்டிகளில் தீவிபத்து... ரயில் பயணிகள் அலறியடித்து ஓட்டம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலின் 5 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் பயணிகள் ரயிலில் அடுத்தடுத்து 5 பெட்டிகள் எரிந்து தீக்கிரையாகின.

investigation,passengers,survivors,fire,maharashtra ,விசாரணை, பயணிகள், உயிர் தப்பினர், தீவிபத்து, மகாராஷ்டிரா

அம்மாநிலத்தின் நியூ அஷ்தியில் இருந்து அகமது நகருக்கு அந்த ரயில் சென்றுக் கொண்டிருந்தது. நாராயண்பூர் என்ற இடத்துக்கு அருகே ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த 4 பெட்டிகளிலும் தீ மளமளவென பரவியது.

ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக இறங்கி உயிர் தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags :
|