- வீடு›
- செய்திகள்›
- டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் மீண்டும் தீ விபத்து: 120 குடிசைகள் தீயில் எரிந்து நாசம்
டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் மீண்டும் தீ விபத்து: 120 குடிசைகள் தீயில் எரிந்து நாசம்
By: Monisha Wed, 03 June 2020 10:52:32 AM
தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 250 குடிசைகள் கருகின. இந்நிலையில் இதே குடிசைப் பகுதியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. 1.30 மணியளவில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு குடிசையில் பறிய தீ மளமளவெனப் பரவி மற்ற குடிசைகளும் பற்றி எரிந்தன.
இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 22 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி 2 மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 120 குடிசைகள் முற்றிலும் கருகி சாம்பலாகின. தீ விபத்து உடனடியாக கண்டறியப்பட்டு அனைவரும் குடிசைகளை விட்டு வெளியேறியதால், யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை.
இப்பகுதியில் ஒரு வாரத்தில் நடந்த இரண்டாவது தீ விபத்து இதுவாகும். தீ விபத்து குறித்து காவல்துறை தொடந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விபத்தால் பல குடும்பங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.