பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு... காவல் துறை சேர்ந்தவர் வீர மரணம்
By: Nagaraj Fri, 10 Nov 2023 3:06:57 PM
ஜம்மு : துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம்... ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று அதிகாலையில் ஜம்முவின் சர்வதேச எல்லை அருகே உள்ள சம்பாவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்தத் தாக்குதலில் தலைமைக் காவலர் லால் ஃபர்ன் கிமா என்பவர் வீரமரணம் அடைந்ததாகவும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு, பாதுகாப்புப் படையினர் தகுந்த பாடம் புகட்டியதாக BSF இன் இயக்குநர் ஜெனரல் நிதின் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Tags :
attack |
jammu |
pakistan |