Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவையில் முதல்முறையாக தென்னிந்திய அளவிலான பேட்மிண்டன் போட்டி

கோவையில் முதல்முறையாக தென்னிந்திய அளவிலான பேட்மிண்டன் போட்டி

By: Nagaraj Sat, 12 Aug 2023 5:19:52 PM

கோவையில் முதல்முறையாக தென்னிந்திய அளவிலான பேட்மிண்டன் போட்டி

கோவை: கோவையில் முதன்முறையாக தேசிய அளவிலான போட்டிக்கான தென்னிந்திய அளவிலான பேட்மிண்டன் போட்டி ராக்ஸ் பள்ளிக்கூடத்தில் நடைபெறுகிறது.

போட்டி குறித்து தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க செயலாளர் வி.இ.அருணாச்சலம் கூறியதாவது: இதில் தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி சேர்ந்த 200 வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இப்போட்டி ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.

19 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 19 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என ஒற்றையர்கள் மற்றும் இரட்டையர்கள் என இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது. தென்னிந்திய அளவிலான பேட்மிட்டன் போட்டி கோவையில் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியானது ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.

badminton,debut,coimbatore,matches,victory,indian team ,பேட்மிண்டன், முதல்முறை, கோவை, போட்டிகள், வெற்றி, இந்திய அணி

இதில் தகுதி பெறுபவர்கள் தேசிய அளவிலான சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர் இறுதி போட்டி அக்டோபர் மாதம் அசாம் மாநிலத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜூனியர் அளவில் 10 பரிசுத்தொகையும் சீனியர் அளவில் 20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

தமிழகத்தில் சர்வதேச அளவில் பயிற்சி அளிக்கப்படுவதால் தமிழ்நாடு அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூனியர் பிரிவில் தமிழ்நாடு அணியும் சீனியர் பிரிவில் கர்நாடக அணியும் சாம்பியன்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்திய அணிக்கு விளையாட தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

கோவை பேட்மிண்டன் சங்க துணைத் தலைவர் அருண், கோவை செயலாளர் ஸ்வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
|