Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் .. முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் .. முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

By: vaithegi Mon, 29 Aug 2022 10:19:49 PM

புதுச்சேரியில் 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்  ..   முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சி தலைவர் சிவா அவர்கள் முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு, உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

chief minister,puducherry ,முதல் அமைச்சர் ,புதுச்சேரி

இதனை அடுத்து இதற்கு பதிலளித்து பேசிய முதல் அமைச்சர் ரங்கசாமி, முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், மேலும் அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து 90 வயது முதல் 100 வயது வரை உள்ளவர்களுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாயும், 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அவர் கூறினார். இதையடுத்து கடலில் மீன் பிடிக்கும்போது விபத்தில் உயிரிழந்தால், மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என முதல் அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

Tags :