Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் முதல் புகைப்படம் வெளியீடு

ராணி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் முதல் புகைப்படம் வெளியீடு

By: Nagaraj Sat, 24 Sept 2022 6:07:04 PM

ராணி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் முதல் புகைப்படம் வெளியீடு

பிரிட்டன்: ராணி நல்லடக்கம் செய்யப்பட்ட இடம்... பிரிட்டன் ராணியார் இரண்டாம் எலிசபெத் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படத்தில், ஒரு கருப்பு நிற மார்பிள் பலகையில், அவரது தந்தை ஆறாம் ஜோர்ஜ் மன்னர், தாயார் முதலாம் எலிசபெத் மற்றும் கடந்த ஆண்டு காலமான கணவர் பிலிப் ஆகியோருடன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

அதன் அருகில், மூன்றாம் சார்லஸ் மன்னரால் செய்யப்பட்ட மாலை, கருங்கல்லுக்கு பக்கவாட்டில் வைக்கப்பட்டுள்ளது. எலிசபெத் ராணியார் அடக்கம் செய்யப்பட பிறகு இந்த இடத்திலிருந்து வெளியான முதல் புகைப்படம் இதுவாகும்.

goodness,rani,photo,remarkable,very old ,நல்லடக்கம், ராணி, புகைப்படம், குறிப்பிடத்தக்கது, மிக பழமை

மேலும் பெயர் பொறிக்கப்பட்டதன் நடுவே ஒரு ஒற்றை உலோக கார்டர் நட்சத்திரம் உள்ளது, இது ஆர்டர் ஆஃப் தி கார்டரின் சின்னமாகும், இது நாட்டின் மிகப் பழமையான மற்றும் உன்னதமான வீரத்தின் சின்னமாகும்.

செப்டம்பர் 8ம் திகதி, ஸ்கொட்லாந்தில் ராணியாருக்கு மிகவும் பிடித்த இடமான பால்மோரல் மாளிகையில் அவர் தனது இறுதி மூச்சை துறந்தார். இதனையடுத்து செப்டம்பர் 19ம் திகதி இங்கிலாந்தில் வின்ட்சரில் உள்ள புனித ஜார்ஜ் சிற்றாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|