மீனவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை; பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது
By: Nagaraj Sun, 12 July 2020 2:26:12 PM
தனிமைப்படுத்தப்பட்ட மீனவர்களுக்கு கொரோனா இல்லை...
மன்னார் - வங்காலை கிராமத்தில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 7 மீனவர்களின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன.
இதில் அவர்களுக்கு தொற்று உறுதியாகவில்லை என அந்த மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரீ.வினோதன் தெரிவித்தார்.
குறித்த மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுப்பட்டிருந்த போது இந்திய மீனவர்
ஒருவரின் படகு பழுதடைந்துள்ள நிலையில் அவருக்கு உதவி வழங்கியுள்ளனர்.
இதற்கமைய,
அவர்கள் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர்
குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்
பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. இதில் அவர்களுக்கு கொரோனா
பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.