- வீடு›
- செய்திகள்›
- ராமேஸ்வரம் கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ராமேஸ்வரம் கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
By: vaithegi Sat, 06 Aug 2022 09:17:40 AM
ராமேஸ்வரம் : தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ந்து கொண்டே இருக்கிறது.
மேலும் இதனை தொடர்ந்து இன்னும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
எனவே இதேபோன்று ராமேஸ்வரம் கடற்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றுதகவல் தெரிவித்து உள்ளது.
இதை அடுத்து இதன் காரணமாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு சென்று மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Tags :