Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிவர் புயல் அச்சத்தால் படகுகள், வலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட மீனவர்கள்

நிவர் புயல் அச்சத்தால் படகுகள், வலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட மீனவர்கள்

By: Nagaraj Tue, 24 Nov 2020 09:45:35 AM

நிவர் புயல் அச்சத்தால் படகுகள், வலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட மீனவர்கள்

படகுகள், வலைகளை பாதுகாக்கும் மீனவர்கள்... வேதாரண்யத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் பகுதியில் உள்ள மீனவ கடற்கரை கிராமங்களான ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருக்கும் மீனவர்கள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகளையும் வலைகளையும் டிராக்டர் உதவியுடன் தொலைவில் உள்ள மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்றனர்.

கஜா புயலின் தாக்கத்திலிருந்து மீளாத இப்பகுதி மக்கள், தற்போது நிவர் புயல் அச்சத்தால் தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி தாலுக்காவில் உள்ள 125 பள்ளிகள், 9 புயல் பாதுகாப்பு கட்டடங்கள், 15 பல்நோக்கு சேவை கட்டிடங்கள் ஆகியவை மக்களை தங்க வைப்பதற்காக தயார் செய்யப்பட்டுள்ளன.

Tags :
|