Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவிப்பு

மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவிப்பு

By: Monisha Tue, 24 Nov 2020 09:05:05 AM

மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவிப்பு

நிவர் புயல் குறித்து அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயாராகவே இருக்கிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

நிவர் புயலால் படகுகள் சேதமடைந்தால் நிவாரண உதவி உடனுக்குடன் வழங்கப்படும். தாழ்வான பகுதிகளில் நீரில் மக்கள் சிக்கினால் மீட்பதற்கு மீன்பிடி படகுகளுடன் மீனவர்கள் தயாராக உள்ளனர். நிவர் புயல் குறித்து அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயாராகவே இருக்கிறது. மீனவர்களுக்கும் அனைத்து விதமான அறிவுரைகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் 100 சதவீத மீனவர்கள் மீன்பிடி படகுகளுடன் பத்திரமாக இருக்கிறார்கள்.

nivar storm,fishermen,boats,t. jayakumar,precaution ,நிவர் புயல்,மீனவர்கள்,படகுகள்,டி.ஜெயக்குமார்,முன்னெச்சரிக்கை

சென்னையில் 143 படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். படகுகளுடன் சென்றிருக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்களும் தற்போது கரை திரும்பிவிட்டனர். எனவே மீனவர்களுக்கும், படகுகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. ஏற்கனவே பல புயல்களை நாம் திறம்பட சமாளித்திருக்கிறோம்.

எனவே அந்த அனுபவம் நமக்கு நிச்சயம் கைகொடுக்கும். எந்த பாதிப்பும் இருக்காது. அந்தந்த மாவட்டங்களில் மீனவர்கள் அதிகாரிகளுடன் உடனுக்குடன் தொடர்புகொள்ள கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை. அரசு விழிப்புடன், முழுவீச்சுடன் எல்லா பணிகளையும் முடுக்கி விட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|