தாய்லாந்து மக்களுக்கு திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை
By: Nagaraj Tue, 18 Oct 2022 10:08:27 PM
தாய்லாந்து: தாய்லாந்தின் 8 தென் மாநிலங்களில் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வார இறுதியில், தாய்லாந்தின் பிரபலமான சுற்றுலா தலமான ஃபூகெட் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளத்தால் மீட்புப் பணிகள் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
தாய்லாந்து முழுவதும் சுமார் 400,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்தனர். வடகிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில்
100,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக தாய்லாந்தின் விவசாய
அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா
உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம், தாய்லாந்து அமைச்சரவை $600 மில்லியன்
நிவாரண உதவிப் பொதிக்கு ஒப்புதல் அளித்தது.